Saturday, October 25, 2025

கொல்லிமலையில் வணிகக்குழுவினரின் கல்வெட்டு கண்டுபிடிப்பு 2025 ஆகஸ்ட் Merchant Guild Inscription from Kollimalai

தமிழில் தகவல் கீழே

A Merchant Guild Inscription was found at Neduvalampatti in the Kollimalai region 2025

Kollimalai has the famous Arappaliswarar temple, Ettukkaiamman temple, and a few other temples, several sculptures of Ayyanar, Jeyshtadevai, and oilpress inscriptions. Kollimalai is a tourist spot and has pleasant weather. It is a historically important region with several inscriptions. It is in Namakkal district and is part of the Eastern Ghat mountains of South India. It has polished stone axes or "Neolithic" celts in local shrines and megalithic burials. 

At Neduvalampatti in Kollimalai, a merchant-guild inscription was found by the researchers from the Department of Maritime History and Marine Archaeology, Tamil University, Thanjavur, V. Selvakumar, Basheer Ahamed, and R. Karthikeyan. The inscription was found on a dressed stone slab. The stone slab has the standing image of Durga/Parameshwari on a peedam, surrounded by the various symbols normally found in the merchant guild inscriptions. The deity is depicted as holding a trident, a sword and a shield. A standing lion with a raised tail with its paw on the peedam is depicted. Around the deity, the symbols of merchant guilds such as drum, lamps, bow and chowri are depicted   

Below the deity an inscription is carved in Tamil script

"Swasti Sri Neduvalamana

desi asiriya pattanam hara"

This means Neduvalam was Desiasiriyapattanam. Desi refers to the medieval merchant guild of Nanadesis. Pattanam refers to the mercantile town. Asiriyam refers to protection or offering refuge. The inscription indicates that the town was a protected settlement of the merchant guilds of the medieval period. Prof.Y. Subbarayalu helped to read the text. The inscription ends with the work "hara", which refers to Shiva.  On stylistic ground it could be dated to the 12th century CE.

Infront of the Merchant Guild Inscription, a stone oilpress/chekku was found without inscription. Nearby a Sanniyasikkal was also found with sacred symbols.

கொல்லிமலையில் இடைக்கால வணிகக்குழுக் கல்வெட்டு கண்டுபிடிப்பு 2025 ஆகஸ்ட்

கொல்லிமலை நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாகும். இங்கு பல கோயில்களும், கல்வெட்டுக்களும், சிற்பங்களும் உள்ளன.

கொல்லிமலையில் உள்ள நெடுவலம்பட்டியில் ஒரு வணிகக்குழு கல்வெட்டு தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முனைவர்ப் பட்ட ஆய்வு மாணவர் பஷீர் அகமது, இரா.கார்த்திகேயன் ஆகியோருடன் வீ.செல்வகுமார் நடத்திய கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில்

”ஸ்வஸ்தி ஸ்ரீ நெடுவலமான தேசி ஆசிரிய பட்டணம் ஹர” என்ற வரிகள் உள்ளன.

நடுவில் வணிகர் தெய்வமான துர்க்கை-பரமேஸ்வரி ஒரு பீடத்தின் மீது உள்ளது.  கையில் கேடயம், திரிசூலம், கத்தி உள்ளிட்ட கருவிகள் கையில் உள்ளன. தெய்வத்தின் அருகில், காலைப் பீடத்தின் மீது வைத்து, உயர்த்திய வாலுடன் ஒரு சிங்கம் உள்ளது. இக்கல்வெட்டு விளக்கு, சாமரம், உள்ளிட்ட பல வணிகக்குழுச் சின்னங்களுடனும் உள்ளது.  இக் கல்வெட்டின் பாடத்தைப் படித்தறிய பேராசிரியர் எ. சுப்பராயலு உதவினார். இக்கல்வெட்டின் இறுதியில் ”ஹர” என்ற சொல் உள்ளது.

கொல்லிமலையில் இடைக்கால வணிகர்கள் வேளாண் பொருள்களைச் சேகரித்து வணிகம் செய்திருக்கவேண்டும். இதில் உள்ள ஆசிரியம் என்ற சொல் அடைக்கலம், பாதுகாப்பு வழங்குதல் தொடர்பானது எனக் கருதப்படுகிறது. இக்கல்வெட்டு வணிகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்ட மையமாக நெடுவலம் விளங்கியுள்ளதை உணர்த்துகிறது.

ஆசிரியம் தொடர்பான பல கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. அவை வேறுவகையானவை. ஆஷ்ரயம் என்ற சொல் மலையாளத்தில் பயன்பாட்டில் உள்ளது. தேசி ஆசிரிய பட்டணம் என்ற சொல்லாட்சி பயன்படுத்தப்பட்ட கல்வெட்டு அருப்புக்கோட்டையில் உள்ளது. தேசி ஆசிரிய பட்டிணம் என்பது வணிகர்களுக்கு அடைக்கலம் அளித்த/பாதுகாக்கப்பட்ட வணிகமையம் என்ற பொருளுடையதாக இருக்கவேண்டும். எழுத்தமைதியின் அடிப்படையில் இது பொ.ஆ. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். இக்கல்லின் முன்னர் ஒரு கல் செக்கு, கல்வெட்டு இல்லாமல் காணப்படுகிறது. 

வணிகக்குழு கல்வெட்டு
Merchant Guild Inscription
தேசி ஆசிரிய பட்டணம் என்ற குறிப்பு அருப்புக்கோட்டைக் கல்வெட்டில் உள்ளது
https://www.tagavalaatruppadai.in/temple-detail.php?temp_id=jZY9lup2kZl6TuXGlZQdjZp9kxyy&tag1=%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D 


  நெடுவலம்பட்டி சன்னியாசிக்கல்
கால் நடைகளின் நலத்திற்காக அமைக்கப்பட்ட குறியீடுகளுடன் உள்ள கல் 

Sanyasikkal at Neduvalampatti Installed for the welfare of the cattle

 


 


Monday, August 11, 2025

Papers on Maritime History of South Asia

 

Papers on Maritime History of South Asia

Kerala Boat

https://pazhayathu.blogspot.com/2013/07/historic-ship-faces-decade-long-neglect.html

Chola Naval Expedition

https://www.academia.edu/143384510/The_Chola_naval_expedition_to_Southeast_Asia


Tuesday, April 16, 2024

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப் பட்ட, முதுநிலை மாணவர் கருத்தரங்கம் 2024

 

 

தமிழ்ப் பல்கலைக்கழகம்

செய்திக்குறிப்பு 16-04-2024


தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப் பட்ட, முதுநிலை மாணவர் கருத்தரங்கம்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 15,16-04-2024 ஆகிய இரு நாள்கள்  முனைவர்ப் பட்ட, முதுநிலை மாணவர் கருத்தரங்கம் கடல்சார் வரலாறு, கடல்சார் தொல்லியல் துறையின் சார்பில் நடைபெற்றது. தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் இ ந் நிகழ்வைத் தொடங்கிவைத்து உரையாற்றினார். மாணவர்கள் ஆய்வுத் திறனை வளத்துக்கொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையில் அயல் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் நடைபெறுவதுபோல இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனக்கூறினார். தமிழ்ப் பல்கலைக்கழக முதுகலைத் தொல்லியல் மாணவர்களும், மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் மாணவர்களும் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு புதிய தொல்லியல் கண்டுபிடிப்புகள், இனவரைவியல் ஆய்வுகள் அடிப்படையிலான தங்களது கட்டுரைகளை வாசித்தனர். குந்தவை  நாச்சியார் கல்லூரியி பணிப்பயிற்சி பெறும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.  மாணவர்களை ஆய்வாளர்களாக உருவாக்குவதற்காக இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் துணைவேந்தர் தெரிவித்தார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமாணவி ஆஸ்லின் காருண்யா கண்டுபிடித்த திரு நெல்வேலி தருவை அருகே கண்டுபிடித்த 1760 ஆம் ஆண்டைச் சேர்ந்த அணைக்கட்டுக் கல்வெட்டு ”அசாது மம்மது இசபு கான் பாதா சாயபு” என்ற பெயரைக் குறிப்பிடுகிறது. இது மருதநாயகம் எனப்படும் யூசுப் கான் அவர்களைக் குறிக்கலாம் எனக் கருதப்படுகிறது. கருத்தரங்கின் தொடக்கவிழாவில் தமிழ்ப் பலகலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் சி தியாகராசன், துறைத் தலைவர் முனைவர் வீ.செல்வகுமார், வருகைதரு பேராசிரியர் கி.இரா.சங்கரன், மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை உதவிப்பேராசிரியர் கோ.மதிவாணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

Thursday, July 4, 2019

திருநாங்கூர் தொல்லியல் அகழாய்வு


திருநாங்கூர் தொல்லியல் அகழாய்வு
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை

நாகை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள  திருநாங்கூரில் 2018-2019 ஆம் ஆண்டில் இந்திய அரசு தொல்லியல் துறையின் அனுமதியுடன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்  கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையினரால் தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழாய்வு 2019 மே-ஜூன் மாதங்களில், முனைவர் வீ.செல்வகுமார் இணைப்பேராசிரியர் நடத்திவரும்  பல்கலைக்கழக நல்கைக்குழுவின்  நிதிபெற்ற திட்டத்தின் உதவியுடன் நடைபெற்றது.
இந்த அகழாய்வில் சங்க காலத் தொல்லியல் சான்றுகள் பல வெளிப்பட்டுள்ளன. நாங்கூர் ஒரு சங்க கால வாழ்விடமாகும். நாங்கூர்  குறித்த செய்திகள் இடைக்கால இலக்கியங்களில் உள்ளன. சங்க காலச் சோழ அரசன் கரிகாலன்  நாங்கூர் வேளின் பெண்ணை மணந்ததாகக் குறிப்பிடும் ஒரு செவி வழிச் செய்தியும் உள்ளது.
தாய்லாந்தில் உள்ள தாக்குவா பகுதியில் கிடைத்த ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டு நாங்கூருடையான் என்பவர் அங்கு ஒரு குளம் வெட்டி அதை மணிக்கிராமத்தார் என்ற வணிகக் குழுவின் மேற்பார்வையில் விட்டமையைத் தெரிவிக்கின்றது, அக்கல்வெட்டு கூறும் நாங்கூருடையான்  என்பவர் சீர்காழிக்கு அருகில் உள்ள இந்த நாங்கூரைச் சேர்ந்தவர் என ஊகிக்கலாம். நாங்கூர் பகுதியில் பதினோரு வைணவ திவ்ய தேசத் தலங்கள் உள்ளன. இங்கு பல சிவன் கோயில்களும், சோழர், பாண்டியர் கல்வெட்டுகளும் உள்ளன.  இக் கோயில்களின் திருவிழாக்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.
இடைக்காலத்தில் நாங்கூர் ஒரு நாட்டுப் பிரிவாக இருந்தது. காவிரிப்பூம்பட்டினம் நாங்கூர்  நாட்டின் கீழ் இருந்தது. காவிரிப் படுகைப் பகுதியில்  நாடு உருவாக்கம், வாழ்விடங்களின் வரலாற்றை அறிவதற்காக இந்திய அரசு தொல்லியல் துறையின் அனுமதியுடன் நாங்கூரில் தற்போது அகழாய்வு நடத்தப்பட்டது.
2019 மே-ஜூன் மாதங்களில் நடத்தப்பெற்ற தொல்லியல் அகழாய்வுகளில் சங்க காலம் முதல் நவீன காலம் வரையிலான தொல்லியல் சான்றுகள் வெளிப்பட்டுள்ளன. கறுப்பு சிவப்பு, கறுப்பு, சிவப்பு பானை வகைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீன், உருவம், மாட்டு வண்டி உள்ள பானையோட்டுக் கீறல் குறியீடுகள் கிடைத்துள்ளன. மேலும் இரும்புப் பொருள்கள் செய்யும் கொல்லர் பட்டறை இருந்தமைக்கான சான்றுகளும் வெளிப்பட்டுள்ளன.
இடைக்காலத்தின் கூறை ஓடுகள், செங்கற்கள் கிடைத்துள்ளன. சுடுமண் பொம்மைகள், சுடுமண் முத்திரைப் பதிவுகள், சுடுமண் தாயம், கண்ணாடி மணிகள், கல் மணிகள் போன்றவை அகழாய்வில் வெளிப்பட்டுள்ளன. இங்கு வாழ்விடச் சான்றுகள்  நான்கு மீட்டர் ஆழத்திற்கும் மேல் கிடைக்கின்றன. இந்த அகழாய்வு நாங்கூர் ஒரு சிறப்பான சங்ககால் ஊர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. 
இந்த ஆய்வு, வைணவ திவ்ய தேசங்கள் மற்றும் தேவாரத் தலங்கள் பல இரும்பு காலத்திலிருந்தே ஊர்களாக உருவாகியுள்ளன என்று உணர்த்துகின்றது. மூதூர் எனப்படும் பல சங்க கால ஊர்கள்   நாடுகள் எனப்படும் தலைமையிடங்களாக உருவாயின. இந்த ஆய்வு காவிரிப் படுகைப் பகுதியின் ஊர்கள் உருவாக்கம், நாடுகளின் தோற்றம், மற்றும் வேளாண்மையின் தொடக்கம் குறித்து ஆராய்கின்றது. இவ்வூரின் வரலாற்றுச் சிறப்பை அறிய மேலும் ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன.
தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்பிரமணியன் அகழாய்வைப் பார்வையிட்டு. தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழர்களின் வரலாற்றையும் பண்பாட்டியும் வெளிக்கொணர பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளது என்று கூறினார்.
நாங்கூரில் மேலும் அகழாய்வு நடத்தினால் பல சங்க கால, இடைக்காலச் சான்றுகள் வெளிப்பட வாய்ப்புள்ளது.
நாங்கூர் குறித்த இலக்கியக் குறிப்புகள்
நாங்கூர் குறித்த  குறிப்புகள் பட்டினப்பாலையிலும், பொருநராற்றுப்படையிலும் இருப்பதாக நெடுஞ்செழியன் எழுதிய நாங்கூர் வரலாறு என்ற  நூலில் சுட்டுகின்றார்ஆனால் நாங்கூர் குறித்த குறிப்புகள்  சங்க இலக்கிய உரையாசிரியர்களால் சுட்டப்படுகின்றன. இதுவரை  நேரடியான குறிப்புகளை சங்க இலக்கியத்தில் என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. எனவே பிற்காலக் குறிப்புகளே நாங்கூர் குறித்து விவரிக்கின்றன. நாங்கூர் சங்க காலத் தொல்லியல் இடம் என்பது அகழாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பட்டினப்பாலையிலும்பொருநராற்றுப்படையிலும்  நாங்கூர் குறித்த குறிப்புகள்  உள்ளதாக எனது பெயரில் செய்தித்தாள்களில் செய்தி வந்துள்ளது.  இது நெடுஞ்செழியனின் நூலின் அடிப்படையிலானது. அகழாய்வுப் பணியில் இருந்த சமயத்தில்   நேரிடையாக பட்டினப்பாலையிலும்பொருநராற்றுப்படையிலும் உள்ள தகவலை உறுதிப்படுத்த இயலவில்லை.  ஆய்வு முறையில் இரண்டாம் நிலைச் சான்றுகளை முற்றிலும்  உறுதி செய்யாமல் ஏற்றல் கூடாது என்பதற்கு இது ஒரு படிப்பினை.

Thursday, October 16, 2008

Saptha Mathar Images from Niyamam


Very attractive Saptha Mathar images were found near Niyamam at Ilagadu Siva temple near Thirukkattuppally. This mages are huge and are very attractvie. They appear to belong to the Nyamam Pidari temple mentioned in Muttaraya inscriptions.